இந்தியா

மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 கார்கள் தீப்பிடித்தது

Published On 2024-02-28 05:15 GMT   |   Update On 2024-02-28 05:54 GMT
  • டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் வெகுநேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
  • டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பள்ளிமுக்கு-கண்ணமூலா ரோட்டில் பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் டிராான்ஸ்பார்பர் தீப்பிடித்து எரிந்தது. மேலும் டிரான்ஸ்பார்மரில் பிடித்த தீ, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களுக்கும் பரவியது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் வெகுநேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News