இந்தியா
இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள்- சோனியா காந்தி மரியாதை
- டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நடைபயணத்தின்போது மரியாதை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நடைபயணத்தின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.