இந்தியா

வீட்டிற்கு வந்த புதிய உறுப்பினர்... கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி

Published On 2024-09-14 13:24 IST   |   Update On 2024-09-14 13:31:00 IST
  • பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.
  • பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இது நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது - 'காவ்: சர்வசுக்ஷா பிரதா'.

லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

அதனால், அதற்கு 'தீப்ஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன என்று கூறியுள்ளார்.

மேலும், பசு கன்றுக்கு பிரதமர் மோடி முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News