இந்தியா

உ.பியில் நடந்த என்கவுன்டரில் ஒருவர் பலி- போலீஸ் படுகாயம்

Published On 2022-07-14 09:43 GMT   |   Update On 2022-07-14 09:43 GMT
  • லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்பு.
  • தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதசேம் மாநிலம், சப்ராலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குர்தி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காடுகளை நோக்கி தப்பிச்சென்ற மூவரையும் காவல்துறையினர் துரத்தினர். அப்போது, அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேரில் லலித் குமார் என்பவர் பலியானார். மற்ற இருவரும் தப்பிவிட்டனர். தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் கான்ஸ்டபிள் ராகுல் என்பவர் காயமடைந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் நீரன் குமார் ஜடான் கூறினார்.

லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News