இந்தியா

ஒடிசாவில் விபத்து- 6 தொழிலாளர்கள் பலி

Published On 2022-09-17 07:11 GMT   |   Update On 2022-09-17 07:11 GMT
  • இறந்தவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவார்கள்.
  • இவர்கள் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.

பூரி:

ஒடிசா மாநிலம் ஜார்சு குடா-சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரியும், தொழிலாளர்கள் சென்ற பஸ்சும் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்கள் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். வேலை முடிந்து பஸ்சில் வீடு திரும்பிய போது தான் இந்த விபத்து நடந்தது.

Tags:    

Similar News