இந்தியா

டெல்லி மேயர் தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு

Published On 2023-02-07 12:54 IST   |   Update On 2023-02-07 12:54:00 IST
  • டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
  • கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி மாநகராட்சி தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கைப்பற்றியது. கவுன்சிலர்கள் பதவியேற்றுள்ள நிலையில் மேயர் துணை தேர்தலில் இழுபறி நீடித்தது. நியமன கவுன்சிலர்கள் ஓட்டு போடக்கூடாது என்று ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது. நேற்று 3-வது முறையாக நடந்த கூட்டத்திலும் பா.ஜனதா-ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே அமளி ஏற்பட்டது. ஆனால் மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

Tags:    

Similar News