இந்தியா

மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2023-07-08 09:17 GMT   |   Update On 2023-07-08 09:17 GMT
  • மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது.
  • சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

புதுடெல்லி:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News