இந்தியா

ஐதராபாத்தில் பட்டாசு புகையால் 2 ஆயிரம் பேர் மயக்கம்

Published On 2023-11-13 05:24 GMT   |   Update On 2023-11-13 07:53 GMT
  • கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
  • சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மதுரவாடா பகுதியில் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

அப்போது அந்தப் பகுதி முழுவதும் பட்டாசு புகை சூழ்ந்தது. பட்டாசு புகையை சுவாசித்த 2000-க்கும் மேற்பட்டோர் சுவாச கோளாறு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

ஒரு சிலருக்கு கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ஐதராபாத்தில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் வெடிக்கப்பட்டது. சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News