இந்தியா

குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து: 4 பேர் பலி- 7 பேர் கவலைக்கிடம்

Published On 2022-10-20 15:07 IST   |   Update On 2022-10-21 08:44:00 IST
  • வெடி மருந்தால் வெடித்ததா அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
  • காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சாவ்லா தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள பன்மோர் நகரில் உள்ள வீட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

7 பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மொரேனா மாவட்ட ஆட்சியர் பாக்கி கார்த்திகேயன கூறுகையில்" இந்த சம்பவம் வெடி மருந்தால் வெடித்ததா அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சாவ்லா தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு, படாலாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Tags:    

Similar News