இந்தியா

பீகாரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி- இருவர் படுகாயம்

Published On 2022-06-11 11:36 IST   |   Update On 2022-06-11 11:36:00 IST
  • காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதி
  • உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துக் கொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர்.

மேலும், உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் விரைவில் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் வட்ட அதிகாரி ராஜ்சேகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News