மக்களவை தேர்தல் பிரசாரம் - ஆந்திரா அரசியலை கலக்கும் 'ஆணுறை'
- ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநில தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை (காண்டம்) முக்கியமான கருவியாக மாறி உள்ளது. ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் சட்டசபைக்கும் தேர்தல் சேர்ந்து நடக்க இருக்கிறது.
அதனால் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வீடு வீடாக செல்லும்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரிசு தொகுப்பை இரு கட்சிகளும் வழங்குகின்றன.
அந்த பரிசு தொகுப்பில் ஆணுறை பாக்கெட் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வழங்கும் ஆணுறை பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும், தெலுங்கு தேசம் வழங்கும் பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை வழங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த விவாகரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் இரு கட்சிகளுமே ஆணுறையை வினியோகித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-
ஒரு வீட்டில் அதிக குழந்தைகள் இருந்தால் மானியமாக அதிக தொகையை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனை குறைக்க ஆணுறை வழங்குகிறோம் என்றனர்.