இந்தியா

லாலு பிரசாத் யாதவ் அறையிலிருந்து மின்விசிறி தீப்பிடித்ததால் பரபரப்பு

Published On 2022-06-07 13:12 GMT   |   Update On 2022-06-07 13:12 GMT
  • சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.
  • சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர்கள் லாலு பிரசாத் யாதவை அழைத்துச் சென்றனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றும் சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டு தீப்பிடித்த மின்விசிறி அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News