இந்தியா

5 ரூபாய்க்கு உணவு வழங்கும் பா.ஜ.க. அறிவிப்புக்கு வரவேற்பு- குஜராத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு

Published On 2022-11-29 06:35 GMT   |   Update On 2022-11-29 06:35 GMT
  • குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் பிரதமர் மோடி அதிக நாட்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காந்திநகர்:

குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறையாக பா.ஜனதா ஆட்சியே நடந்து வருகிறது.

தற்போது குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் பிரதமர் மோடி அதிக நாட்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பா.ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 100 இடங்களில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்ற பா.ஜனதாவின் அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து மானிய திட்டங்களும் குஜராத்திலும் அமல் படுத்தப்படும்.

கல்வி, சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் குஜராத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News