இந்தியா
மின்னல் தாக்கி 8 தொழிலாளிகள் காயம்
- கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வருகிற 3-ந்தேதி இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கோழிக்கோடு மாவட்டம் இடச்சேரி பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 20 பேரில், 8 பேர் மின்னல் தாக்கி காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடி-மின்னல் இருக்கும் போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.