இந்தியா
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறைதண்டனை
- இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் வாலிபருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்த வாலிபர் அனூப்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை அனூப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர். இந்த வழக்கு பரவூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாலிபர் அனூப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 15ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.