இந்தியா

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் பலி

Published On 2022-09-30 14:46 GMT   |   Update On 2022-09-30 14:46 GMT
  • கச்சாஹ்ரி சௌக் பகுதியில் தொழிலாளர்கள், அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
  • இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள குக்ஷி நகரில் பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கச்சாஹ்ரி சௌக் பகுதியில் தொழிலாளர்கள், அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையின் துணைப் பிரிவு அதிகாரி திலிப் சிங் பில்வால் கூறுகையில், "மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் பர்வானியில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். பலியானவர்கள் கோவிந்த் (32), ரூப் சிங் (35), ராகேஷ் (30), மற்றும் தேர் சிங் (40) என அடையாளம் காணப்பட்டனர்" என்றார்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News