இந்தியா

குஜராத்தில் 2 இடங்களில் திடீர் நிலநடுக்கம்

Published On 2023-01-30 05:27 GMT   |   Update On 2023-01-30 05:27 GMT
  • கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அகமதாபாத்:

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 6.38 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துதாய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் வடக்கு-வடகிழக்கே பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.

அதற்கு முன்னதாக அதிகாலை 5.18 மணியளவில் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News