இந்தியா

ஜம்மு காஷ்மீர் குல்காம் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சரண்

Published On 2022-07-06 03:42 GMT   |   Update On 2022-07-06 04:13 GMT
  • என்கவுன்டரின்போது இரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சரணடைந்துள்ளனர்.
  • பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஹதிகம் பகுதியில் நேற்று நள்ளிரவில் என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், என்கவுன்டரின்போது இரண்டு பேரும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் மூறையீட்டின்பேரில் சரணடைந்துள்ளனர். பின்னர், பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News