இந்தியா

சித்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்- பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக புகார்

Published On 2023-08-04 09:53 IST   |   Update On 2023-08-04 09:53:00 IST
  • மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சோமபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் தங்களது நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர்.

இந்த நிலையில் மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.

தங்களது மகளை யாரோ பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தீவிர விசாரணைக்கு பின்னரே மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவரும் என்றனர்.

Tags:    

Similar News