இந்தியா

பயங்கரவாத தாக்குதல் எதுவாயினும் எதிர்க்கிறோம்: தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி

Published On 2025-08-16 23:25 IST   |   Update On 2025-08-16 23:25:00 IST
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா சென்ற 26 பேர் பலியாகினர்.
  • இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கிடையே, தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி சோ ஹியூன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.

இந்நிலையில், தென் கொரிய வெளியுறவு மந்திரி சோ ஹியூன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் நாங்கள் மிக திடத்துடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பயங்கரவாத தாக்குதல் எதுவாக இருப்பினும் அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதுணையாக நாங்கள் நிற்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News