இந்தியா

ஸ்மிருதி இரானி

ரூ.2000 கோடி குடும்ப சொத்துக்களை பாதுகாக்கவே போராட்டம்- மந்திரி ஸ்மிருதி இரானி கருத்து

Published On 2022-06-13 14:22 IST   |   Update On 2022-06-13 16:40:00 IST
  • அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தோண்டர்கள் போஒராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

புது டெல்லி:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பு ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் குவிந்தனர். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார் இதனையடுத்து தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி விசாரணை அலுவலகத்திற்குச் சென்றார்.

இதையடுத்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதி இராணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி கூறியதாவது:-

நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாகவே ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். இது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையெல்லாம் இல்லை. காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால், தற்போது அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது காந்தி குடும்பத்தின் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகும். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

Tags:    

Similar News