இந்தியா

சில காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு: சசி தரூர்

Published On 2025-06-19 15:42 IST   |   Update On 2025-06-19 15:42:00 IST
  • நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்.
  • அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அக்கட்சியின் சில தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசி தரூர் கூறியதவாது:-

நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன். எனினும், சில காங்கிரஸ் தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு. சில விஷயங்கள் குறித்து நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது பொது வெளியில் உள்ளன. நீங்கள் (மீடியா) கூட வெளியிட்டுள்ளீர்கள்.

இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அழைப்பில்லாத இடத்திற்கு செல்லமாட்டேன். வெளிநாட்டுக்கு என்னுடைய தலைமையிலான குழு சுற்றுப் பயணம் செய்து சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது உள்ளூர் அரசியல் குறித்து விவாதிக்கவில்லை.

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

Tags:    

Similar News