இந்தியா

சாதனா குப்தா

உ.பி. முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மனைவி காலமானார்

Published On 2022-07-09 20:02 IST   |   Update On 2022-07-09 20:02:00 IST
  • உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா மரணமடைந்தார்.
  • அவரது மறைவுக்கு உ.பி. துணை முதல் மந்திரி இரங்கல் தெரிவித்தார்.

லக்னோ:

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா. இவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார். அவரது உடல் லக்னோவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா தனது இரங்கலை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா மறைவு என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவரது புனித ஆன்மா சாந்தியடையட்டும். முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பை தாங்கிக்கொள்ளும் தைரியம் கொடுக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News