இந்தியா

டெல்லியில் முப்படை தலைமை தளபதியுடன் தீவிர ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங்

Published On 2025-04-27 20:17 IST   |   Update On 2025-04-27 20:17:00 IST
  • புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் ஆகும்.
  • தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. கூட்டத்தில், ஜெனரல் சவுகான் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விரிவாக விளக்கினார். மேலும் அதற்கான உத்திகள் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை குறித்து விவாதித்தார்.

2019 இல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் ஆகும்.  

ஏப்ரல் 22 இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 முதல் பஹல்காமில் சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்களைத் தேடும் பணியை தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுக்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

விசாரணையில் NIA ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News