இந்தியா

பஞ்சாப் எல்லையில் 6 பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது BSF..!

Published On 2025-07-24 15:38 IST   |   Update On 2025-07-24 15:38:00 IST
  • அமிர்தசரஸில் உள்ள மோதே எல்லையில் 5 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
  • ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 டிரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அமிர்தசரஸில் உள்ள மோதே கிராமத்தில் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் (magazines), 1.070 கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Tags:    

Similar News