இந்தியா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்

Published On 2025-04-03 08:54 IST   |   Update On 2025-04-03 08:54:00 IST
  • ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.
  • இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவந்தது.

இந்த நிலையில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) தலைமை இயக்குநராக பணியாற்றும் பூனம் குப்தாவை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 4-வது ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக 3 ஆண்டு காலத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூனம் குப்தா பதவியேற்கும் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலும் உறுப்பினராவார்.

Tags:    

Similar News