இந்தியா
ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. 3 பேர் கைது
- இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சிவசாகர் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டத்தில் போலீசாரின் இருவேறு நடவடிக்கைகளில் ரூ.48 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின்போது, வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.