இந்தியா
பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்
- விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார்.
- வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது எம்.பி. தொகுதியான வாரணாசி பகுதிக்கு நாளை செல்கிறார். அங்கு அவர் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார். பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 53 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.