இந்தியா

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை விமான நிலையங்களில் நடத்தப்படும்

Published On 2022-12-22 02:30 GMT   |   Update On 2022-12-22 02:30 GMT
  • ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது.
  • விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும்.

புதுடெல்லி :

சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.

இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த வகையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ('ரேண்டம்') நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச, இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News