இந்தியா
பாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து 2 நாள் காங்கிரஸ் ஆலோசனை
- காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம்.
- ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருக்கு அழைப்பு.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து டிசம்பர் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வம் பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.