பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து
- தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
- அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு குறித்து 2016ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த சமயத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 2017இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சான்றிதழை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, மோடியின் சான்றிதழை டெல்லி பல்கலைக்ழகம் வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.