இந்தியா

ஒரு விரல் புரட்சியே.. தேசிய வாக்காளர் தினம் இன்று - முக்கியத்துவம் என்ன?

Published On 2025-01-25 13:21 IST   |   Update On 2025-01-25 13:21:00 IST
  • தோட்டவை விட வாக்குச் சீட்டு சக்தி வாய்ந்தது -ஆபிரகாம் லிங்கன்
  • வாக்கு, ஜனநாயகத்தில் நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த வன்முறையற்ற கருவி - ஜான் லூயிஸ்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக இளைஞர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் என்பதால் ஜனவரி 25 இந்த நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வலுவான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம்.

2025 தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள், 'வாக்களிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்' என்பதே ஆகும்.

வாக்குரிமை பற்றிய மேற்கோள்கள்:

தோட்டவை விட வாக்குச் சீட்டு சக்தி வாய்ந்தது - ஆபிரகாம் லிங்கன்

வாக்கு, ஜனநாயகத்தில் நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த வன்முறையற்ற கருவி - ஜான் லூயிஸ்

வாக்கு என்பது துப்பாக்கி போன்றது, ஆனால் அதை பயன்படுத்துவோரின் தன்மையைப் பொறுத்தது - தியோடர் ரூஸ்வெல்ட்

முக்கியமான விஷயங்களில் நாம் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கை முடிந்துவிடும்- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

Tags:    

Similar News