இந்தியா

கோப்புபடம்

தெலுங்கானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.758 கோடி மது விற்பனை

Published On 2024-01-03 05:43 GMT   |   Update On 2024-01-03 05:43 GMT
  • ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது.
  • புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிக முக்கியமானதாக மது விருந்து இடம் பிடித்தது.

இதற்காக முன்கூட்டியே தெலுங்கானா மாநில மதுபானங்கள் துறையினர் கடைகளுக்கு தேவையான பீர் மற்றும் ஹாட் வகைகளை அனுப்பி வைத்தனர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மது பாட்டில்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

மேலும் மதுபான கடைகள் 31-ந் தேதி நள்ளிரவு வரை திறக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக மதுக்கடைகளும் திறந்தனர்.

ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது. இதே போல தெலுங்கானா மாநிலத்தின் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மது விற்பனையானது. குடிமகன்கள் போட்டி போட்டு மது வாங்கிச் சென்று உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. மொத்தமாக ரூ.758 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News