13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத்தலைவர் உத்தரவு
- மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
* மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.
* அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம்.
* சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம்.
* இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம்.
* அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம்.
* ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம்.
* சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம்.
* மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம்.
* மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம்.
* பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்.
* மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்.
* லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.