இந்தியா

வங்காள விரிகுடா கடலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2023-09-11 02:18 IST   |   Update On 2023-09-11 02:18:00 IST
  • வங்காள விரிகுடா கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

புதுடெல்லி:

வங்காள விரிகுடா கடலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News