இந்தியா

செல்போன், லேப்டாப் இல்லாமல் குடும்பத்தை நிம்மதியாக சாப்பிட வைக்க தாயின் புது 'டெக்னிக்'

Published On 2023-05-18 05:03 GMT   |   Update On 2023-05-18 05:03 GMT
  • சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர்.
  • இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார்.

மனிதனின் ஆறாம் விரலாய் செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர். இதனால் குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போதும், சமையலறையில் செல்போன், லேப்டாப்பிற்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது எனலாம்.

இந்நிலையில் ஒரு தாய் தனது குடும்பத்தினரை செல்போன், லேப்டாப் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட வைப்பதற்காக மேற்கொண்ட புது 'டெக்னிக்' இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், லேப்டாப்பை அவரிடம் ஒப்படைத்த பிறகே அவர்களுக்கு தட்டில் சாப்பாடு போடுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாயின் டெக்னிக்கை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

Tags:    

Similar News