உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை - செமி கண்டக்டர் மாநாட்டில் மோடி பேச்சு
- செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது.
- அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம்.
ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் இத்தயாரிப்பிற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.
மின்னணு சிப் தயாரிப்பில் இந்தியாவை உலகின் ஒரு முக்கியமான மையமாக உருவாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற "செமிகான்இந்தியா 2025" மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் பேசிய மோடி, "உலகம் இந்தியாவை நம்புகிறது, உலகம் இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்று நான் இங்கே இருக்கிறேன். அனைத்து முதலீட்டாளர்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் என்று கூறப்படுகிறது, ஆனால் 'சிப்'கள் டிஜிட்டல் வைரங்கள். நமது கடந்த நூற்றாண்டு எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது... ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது. இந்த சிப்உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.