இந்தியா

சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியவருக்கு 80 ஆண்டு சிறை தண்டனை

Published On 2023-10-06 10:22 GMT   |   Update On 2023-10-06 10:22 GMT
  • போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர்.
  • குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடந்த 2020-ம் ஆண்டு உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வர்க்கீஸ் தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் ஆண் உறவினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 80 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.40ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக சிறுமிக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News