இந்தியா

(கோப்பு படம்)

ரயில் முன் விழுந்து தற்கொலை செய்த தந்தை- காப்பாற்ற முயன்ற மகனும் பலியான பரிதாபம்

Published On 2022-11-13 19:45 GMT   |   Update On 2022-11-13 19:46 GMT
  • தண்டவாளத்தின் நடுவில் தந்தை நிற்பதைக் கண்ட மகன் காப்பாற்ற ஓடியுள்ளார்.
  • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹரி சிங் நர்வாரியா(55). நேற்று தனது குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக ரயில் பாதையில் நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தண்டவாளத்தின் நடுவில் தனது தந்தை நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காப்பாற்ற டிராக்கில் அவர் ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியது.

இதில் உடல் துண்டான நிலையில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News