இந்தியா

ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி கைது

Published On 2025-08-08 21:38 IST   |   Update On 2025-08-08 21:38:00 IST
  • அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
  • தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.

தீபக் சைனி தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.

அவ்வாறு, ஒரு சிறுமியின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News