இந்தியா

பெங்களூரு மெட்ரோவில் பெண்களை ரகசியமாக படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் கைது

Published On 2025-05-24 06:42 IST   |   Update On 2025-05-24 06:42:00 IST
  • பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.
  • அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது இந்த வீடியோக்களை எடுத்துள்ளார்.

பெங்களூரு நகர மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ்' என்ற பெயரில் இயங்கும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் மெட்ரோ ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் பெண்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கணக்கை 5,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவது தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கர்நாடகாவின் ஹசான் நகரை சேர்ந்த திஹந்த் ஆவார். இந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.

அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது அதில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட திஹந்த் இடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அந்தக் கணக்கில் இருந்த அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டன. பின்னர் அந்தக் கணக்கு இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கப்பட்டது. 

Tags:    

Similar News