இந்தியா

96 வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற கேரள மூதாட்டி கார்த்திகாயினி அம்மா 101 வயதில் மரணம்

Published On 2023-10-12 09:31 IST   |   Update On 2023-10-12 09:31:00 IST
  • மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார்.
  • நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகாயினி அம்மா. 101 வயது மூதாட்டியான இவர், குடும்ப ஏழ்மை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். இதனால் அவர் தனது இளமை பருவத்தில் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தனது 96 வயதில் அவருக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே கடந்த 2018-ம் ஆண்டு 4-ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வமாக படித்த அவர், தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதன்மூலம் மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார். அப்போது அவருக்கு நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கார்த்திகாயினி அம்மா ஹரிப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News