இந்தியா

பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்: ராகுல், பிரியங்கா வலியுறுத்தல்

Published On 2022-08-26 02:48 GMT   |   Update On 2022-08-26 02:48 GMT
  • பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
  • அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது.

புதுடெல்லி :

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி விடுதலை செய்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்று வெற்று கோஷம் எழுப்புபவர்கள், கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இது, பெண்களின் மரியாதை, உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''11 கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலையில் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News