இந்தியா
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
- நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத் மரியாதை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.