இந்தியா

(கோப்பு படம்)

ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Published On 2022-10-25 00:27 IST   |   Update On 2022-10-25 00:27:00 IST
  • தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கினர்.
  • தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

தாதியா:

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. சீதாபூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் மைனர் குழந்தைகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடிய லாரி ஓட்டுநர், சிருலா பகுதியில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆதார் அட்டை அடிப்படையில்,குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News