இந்தியா

இமாச்சல பிரதேச பா.ஜ.க. தலைவர் ராஜினாமா

Published On 2023-04-21 06:01 GMT   |   Update On 2023-04-21 06:04 GMT
  • தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார்.
  • தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் சிம்லா மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காசியாப் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக ராஜினாமா செய்து இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொடர் தோல்வி காரணமாக அவர் ராஜினாமா செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News