இந்தியா
கேரளாவில் 5 நாட்கள் கனமழை எச்சரிக்கை
- எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரள கடற்கரையோரங்களில் இன்று நள்ளிரவு 11.30 மணி வரை 0.6 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை 9-ந்தேதியும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள கடற்கரையோரங்களில் இன்று நள்ளிரவு 11.30 மணி வரை 0.6 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.