இந்தியா

தொங்கு பால விபத்தில் என் குடும்பத்தினர் 12 பேரை இழந்துவிட்டேன்: பா.ஜ.க. எம்.பி. கண்ணீர்

Published On 2022-11-01 07:38 IST   |   Update On 2022-11-01 07:38:00 IST
  • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
  • 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆமதாபாத்

குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.

100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேரை நான் இழந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது சகோதரி குடும்பத்தினர்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News