இந்தியா

தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து திரும்ப பெற்றது அரசு

Published On 2022-08-03 14:34 GMT   |   Update On 2022-08-03 14:34 GMT
  • தரவு பாதுகாப்பு மசோதா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பாராளுமன்ற கூட்டுக்குழுவின அறிக்கை 2021, டிசம்பர் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது

புதுடெல்லி:

தனிநபர்களின் தனிப்பட்ட தரவு தொடர்பான டிஜிட்டல் தனியுரிமையை பாதுகாக்க வகை செய்யும் தரவு பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் இருந்து மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றது. இந்த மசோதா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது அந்த குழுவின் அறிக்கை 2021ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தரவு பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

Tags:    

Similar News