இந்தியா

அடுத்த மாதம் நக்சலிசம் முடிவுக்கு வரும்: உள்துறை இணை மந்திரி

Published On 2026-02-05 03:18 IST   |   Update On 2026-02-05 03:18:00 IST
  • நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
  • இந்தப் பிரச்சனை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.

புதுடெல்லி:

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:

இடதுசாரி பயங்கரவாதம் அல்லது இந்தியாவில் பொதுவாகக் குறிப்பிடப்படும் நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது. இதுகுறித்த தேசியக் கொள்கை இல்லாததால் இது பல தசாப்தங்களாக நீடித்து வந்தது.

2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா நக்சலிசத்தில் இருந்து விடுபடும்.

கடந்த 2018-ம் ஆண்டு பயங்கரவாதத்தால் 126 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2025 டிசம்பரில் அவை 8 மாவட்டங்களாகக் குறைந்துள்ளன.

பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை மற்றும் தலைமையின் கீழ் நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News